மீண்டும் பலிக்கு பலி - அமெரிக்கா மீதான சீனாவின் அடுத்த பாய்ச்சல்..!
அமெரிக்கா (US) விதித்த பாரிய வரிகளுக்கு எதிராக சீனா (China) மீண்டும் பதிலளித்துள்ளது.
சீன இறக்குமதிகள் மீதான வரிகளை 145% ஆக அதிகரிப்பதாக வெள்ளை மாளிகை நேற்று (10) அறிவித்தது. இதன்படி, அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை சீனா 84% லிருந்து 125% உயர்த்தி இன்று அறிவித்துள்ளது.
அத்தோடு, சீனா விதித்த குறித்த வரியானது, நாளை (12) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான விதி மீறல்
சீனா மீது அமெரிக்கா அசாதாரணமாக அதிக வரிகளை விதிப்பது சர்வதேச வர்த்தக விதிகள், அடிப்படை பொருளாதார சட்டங்கள் மற்றும் பொது அறிவை கடுமையாக மீறுவதாக சீன நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இறுதியாக அறிவிக்கப்பட்ட வரிகளுக்கு கூடுதலான அமெரிக்காவின் அதிகரிப்புகளைப் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாகவும் சீன கூறியுள்ளது.
வர்த்தக மோதல்
இதேவேளை, சமீபத்திய சுற்று வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்காவிற்கு எதிராக சீனா வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அமெரிக்க தயாரிப்புகள் மீதான வரிகளை 125 சதவீதமாக உயர்த்துவதாக சீனா அறிவித்ததானது, இரண்டு பெரிய உலகப் பொருளாதாரங்களுக்கு இடையேயான வர்த்தக மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
