காத்தான்குடி பிரதான வீதியில் விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து!
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதி சொகுசு பேருந்து லொறியுடன் விபத்துக்குள்ளாகியுள்ளது.
காத்தான்குடி காவல்துறை பிரிவில் உள்ள பகுதியில் குறித்த அதிசொகுசு பேருந்து ஞாயிற்றுக்கிழமை (21.09.2025) அதிகாலை காத்தான்குடி பிரதான வீதியில் லொறி மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்தும் கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி சென்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பின்னால் வந்த முச்சக்கரவண்டி
இதனை அடுத்து பேருந்தின் பின்னால் சென்று கொண்டிருந்த முச்சகரவண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி சென்ற லொறி பிரதான வீதியின் சாலை ஓரமாக உள்ள உணவகம் ஒன்றில் நிறுத்துவதற்காக வீதி ஓரமாக நிறுத்த முற்பட்டபோது பேருந்து வேகக் கட்டுப்பாட்டினை இழந்து லொறியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்தின் போது முச்சக்கரவண்டி மற்றும், அதி சொகுசு பேருந்தின் முன் பகுதி பாரிய சேதத்துக்குள்ளானதுடன் லொறியின் பின் பகுதியும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் எவருக்கும் உயிர் ஆபத்து ஏற்படாத நிலையில் பேருந்தின் சாரதி நடத்துனர், மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து காாவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

