காத்தான்குடியில் காய்த்துக் குலுங்கும் பேரீச்சம்பழங்கள்: காண குவியும் மக்கள்
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள காத்தான்குடி, வெப்பமான காலநிலையும் கடலோரச் சூழலுடனும் சிறப்பாக விளங்கும் பிரதேசமாகும்.
இந்த நகரின் அழகு மேம்பாட்டு முயற்சியின் ஒரு பகுதியாக நடப்பட்ட பேரீச்சம் பழ மரங்கள், தற்போது அறுவடைக்கு தயாராக காய்த்து குலுங்கி வரும் தோற்றத்தால் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
பொதுவாக இறக்குமதியான பேரீச்சம் பழங்கள், இப்போது இலங்கையிலேயே உற்பத்தி செய்து அறுவடை செய்யப்படுவது ஒரு முக்கிய முன்னேற்றமாகக் காணப்படுகிறது.
பேரீச்சம் பழ அறுவடை
குறிப்பாக, காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்ட மரங்கள் இந்த ஆண்டில் அதிக விளைச்சலை அளித்துள்ளன. கடுமையான வெப்ப நிலைமைகளும் இந்த விளைச்சலுக்கு காரணமாக உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நகரசபை ஊழியர்கள் நேற்று அதிகாரப்பூர்வமாக பேரீச்சம் பழ அறுவடை விழாவை முன்னெடுத்தனர்.
இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதோடு, வணிக ரீதியிலும் மக்களின் வாழ்வாதாரத்திலும் புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தம் வகையில் அமைந்திருந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
