குருந்தூர் மலையில் தொடரும் அட்டூழியம்: அபகரிக்கப்படும் வயல் நிலங்கள்

Sri Lankan Tamils Tamils Sonnalum Kuttram
By Independent Writer Oct 16, 2025 08:30 AM GMT
Report

குருந்தூர் மலை பகுதியில் சுற்றியுள்ள வயல் நிலங்களானது தொல்பொருள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டை கரைதுறைபற்று பிரதேச சபை தவிசாளர் சின்னராசா லோகேஸ்வரன் முன்வைத்துள்ளார்.

தமிழ் மக்களின் பூர்வீக இடமாக காணப்படுகின்ற குமுழமுனை தண்ணி முறிப்பு குருந்தூர் மலை பகுதியில் இருந்த ஆதி சிவன் ஐயனார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு விகாரை அமைக்கப்பட்டதன் பின்னணியில் அதனை சூழ உள்ள வயல் நிலங்களையும் தொல்பொருள் திணைக்களம் அபகரிப்பு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், குறிப்பாக நீதிமன்ற தடை உத்தரவுகளை மீறியும் குருந்தூர் மலைப்பகுதியிலே விகாரை அமைக்கும் பணிகள் முற்றும் முழுதாக நிறைவு செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு தடைகளை மீறியும் தமிழ் மக்களினுடைய பூர்வீக வயல் நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்கின்ற தொல்பொருள் திணைக்களத்தினுடைய செயல்பாடுகள் தொடர்ந்து வருகின்றன.

இதனடிப்படையில், தமிழ் மக்களினுடைய பூர்வீக வயல் நிலங்களில் நேற்று முன்தினம் (14) தொல்பொருள் திணைக்களத்தினால் புதிதாக பெயர்பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்று (16) குறித்த இடத்திற்கு கரைதுறைப்பற்று பிரதேச சபையினுடைய தவிசாளர் சின்னராசா லோகேஸ்வரர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் குறித்த வட்டாரத்தினுடைய உறுப்பினர் கலைச்செல்வன் ஆகியோர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த குருந்தூர் மலை பகுதி மற்றும் மக்களின் வயல் நிலங்களில் புதிதாக பெயர் பலகை நடப்பட்ட இடங்களை இதன்போது பார்வையிட்டுள்ளனர்.

இதையடுத்து, கரைதுறைப்பற்று பிரதேச சபையினுடைய தவிசாளர் சின்னராசா லோகேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “தமிழ் மக்கள் பூர்வீகமாக வயல் செய்து வந்த நிலங்களை தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மாறி மாறி வந்த ஆட்சியாளர்களைப் போன்று தற்போதைய அரசாங்கமும் தமிழ் மக்களினுடைய நிலங்களை அபகரிக்கின்ற நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

இவ்வாறு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால் இதற்கு எதிராக மக்களை இணைத்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி வரும்” என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த பகுதியில் வனவள திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த மக்களை அங்கு மீள்குடியேற விடாத அளவிலே தடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், குறித்த இடத்தில் வசித்து வந்த மக்களை உடனடியாக அந்த இடத்தில் மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

கிளிநொச்சியில் ஆபத்தான நிலையில் செயற்படும் அரச பேருந்துகள்!

கிளிநொச்சியில் ஆபத்தான நிலையில் செயற்படும் அரச பேருந்துகள்!

காசா போரில் இஸ்ரேலுக்கு வெற்றியா…! தோல்வியா…!

காசா போரில் இஸ்ரேலுக்கு வெற்றியா…! தோல்வியா…!

தன்னிச்சையாக செயற்படும் வெற்றிலைக்கேணி கடற்தொழிலாளர் சங்கம்

தன்னிச்சையாக செயற்படும் வெற்றிலைக்கேணி கடற்தொழிலாளர் சங்கம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்