இலங்கையில் மர்ம சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு(படங்கள்)
இலங்கையின் தெனியாய − விஹாரஹேன பகுதியில் இரண்டு சுரங்கப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகளுக்காக வீதியின் இரு பகுதியிலும் உள்ள மண்மேடுகளை வெட்டியவேளை அடாரதெனிய முச்சந்தியில் இந்த சுரங்கப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இரண்டு சுரங்கப் பாதைகளும் ஒரே இடத்தில் ஆரம்பமாகும் அதேவேளை, சுரங்கப் பாதை ஆரம்பமாகும் இடத்தில் வீடுகள் கிடையாது என தெரிய வருகின்றது. எனினும், சுரங்கப் பாதை பயணிக்கும் திசையில் வீடுகள் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப் பாதைகள் எந்த காலப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டவை? இல்லையெனில் இயற்கையாகவே உருவானதா? என்பது தொடர்பாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இதேவேளை, இந்த சுரங்கப் பாதை சம்பந்தமாக ஆய்வுகளை நடத்த இதுவரை எந்தவொரு நிறுவனமும் முன்வரவில்லை என அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.



