ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை - எந்தவித முன்னேற்றமும் இல்லை!
"ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இன்று வரை எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்றுதான் நான் பார்க்கின்றேன்.
அண்மையில் அசாத் மௌலானா என்பவர் ஜெனிபாவில் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் தனது கட்சியைச் சார்ந்த சிலரை அவர் குற்றம் சாட்டி இருக்கின்றார்.
எனவே இந்த தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதை சரியான முறையில் விசாரணை செய்து உரிய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
தூபி முன்பாக அஞ்சலி
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்த அரசாங்கம் இவ்வாரான ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கிருக்கின்றார்கள்.
இந்த ஏப்ரல் குண்டு தாக்குதலுக்கு காரணமானவர்களை இனம் கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
அதற்கு ஒரு துரும்புச்சிட்டாக அசாத் மௌலானா வழங்கியுள்ள வாய் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணையை நடத்தி, அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்." என மட்டக்களப்பு மாநகர முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு மட்டக்களப்பு மாநகர சபையால் நிர்மாணிக்கப்பட்ட தூபி முன்பாக அஞ்சலி செலுத்திய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
