யாழில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம்(25) வயறிங் வேலையில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
வண்ணார்பண்ணை - பத்திரகாளி கோவில் பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் நிருஜன் (வயது 42) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் - பூநாறிமடம் பகுதியில் கடை வேலை ஒன்று நடைபெற்று வந்தது. அங்கு முதலாவது மாடியில் குறித்த நபர் வயறிங் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை தவறுதலாக கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது அவருடன் வேலை செய்தவர்கள் அவரை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். இருப்பினும் அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 7 மணி நேரம் முன்
