களனி பிரதேசத்தில் போலி ஆவணங்களுடன் பெண் கைது
களனி பிரதேசத்தில் போலியான ஆவணங்களுடன் பெண் ஒருவர் நேற்று முன்தினம் (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ஜாஎல பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து களனி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, 5000 ரூபா போலி நாணயத்தாள், போலி தேசிய அடையாள அட்டை, எட்டு வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், இரண்டு வெளிநாட்டு தேசிய அடையாள அட்டைகள், வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரம், அரசாங்கத்தின் 11 இறப்பர் முத்திரைகள் மற்றும் ஏனைய ஆவணங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதவான் நீதிமன்றில்
இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த பெண் ஜாஎல பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடையவரெனவும் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 14 மணி நேரம் முன்