யாழில் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட கடவுச்சீட்டு அலுவலகம்

Jaffna Anura Kumara Dissanayaka Passport Ananda Wijepala
By Thulsi Sep 01, 2025 08:49 AM GMT
Report

புதிய இணைப்பு

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம் இன்று (01.09.2025) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டச் செயலகத்தின் 60 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு முத்திரையும் தபால் தலையும் வெளியிடப்பட்டது.

யாழில் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட கடவுச்சீட்டு அலுவலகம் | Good News Peoples Who Are Waiting For New Passport

இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால ,கடற்றொழில் நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகன் , பிரதியமைச்சர்களான சுனில் வட்டஹல. நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், மற்றும் சி்விகே சிவஞானம் அமைச்சின் செயலாளர்கள், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

யாழில் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட கடவுச்சீட்டு அலுவலகம் | Good News Peoples Who Are Waiting For New Passport

முதலாம் இணைப்பு 

யாழ். மாவட்ட செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தினை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) திறந்து வைக்கவுள்ளார்.

வட மாகாண மக்கள் கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு குடியகல்வு அலுவலகம் திறந்து வைக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியாக அநுர பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அவை வடக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்தே ஆரம்பிக்கப்படவுள்ளது.

மயிலிட்டியில் ஜனாதிபதி கலந்த நிகழ்வில் மதகுருமார்கள் இல்லை - அம்பலமான அநுர அரசின் கபடம்

மயிலிட்டியில் ஜனாதிபதி கலந்த நிகழ்வில் மதகுருமார்கள் இல்லை - அம்பலமான அநுர அரசின் கபடம்

மைதானத்திற்கான ஆரம்ப நடவடிக்கை

அந்தவகையில், யாழ்ப்பாணம் வருகை தரும் ஜனாதிபதி காலை 08.30 மணியளவில் மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

யாழில் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட கடவுச்சீட்டு அலுவலகம் | Good News Peoples Who Are Waiting For New Passport

யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத்தினை இன்றைய தினம் (1.09.2025) திங்கட்கிழமை காலை 09.30 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார்.  

அதனை தொடர்ந்து  ஜனாதிபதி மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்திற்கான ஆரம்ப நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி யாழ். பொது நூலகத்திற்கு விஜயம் செய்து நூலகத்தை பார்வையிடவுள்ளதுடன் சில நூல்களையும் அன்பளிப்பு செய்யவுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி, செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளையும் நேரில் பார்வையிட வாய்ப்புள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் காற்றாலைக்கு எதிராக தொடரும் போராட்டம்

மன்னாரில் காற்றாலைக்கு எதிராக தொடரும் போராட்டம்

நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுர

நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுர

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்
23ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010