தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் கோட்டாபய..! பிரதமராக்க தீவிர முயற்சி
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்குள் அழைத்து வர மொட்டு கட்சி ஒரு குழுவினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக தெரியவருகின்றது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து வெடித்த மக்கள் புரட்சியால் கோட்டாபய ராஜபக்ச அதிபர் பதவியை துறந்தார்.
நாட்டிலிருந்து ரகசியமாக வெளியேறிய கோட்டாபய வெளிநாட்டுக்கு சென்று அங்கிருந்தே தனது இராஜினாமாக் கடிதத்தை அனுப்பினார்.
மக்கள் போராட்டங்கள்
அதன்பின்னர் அதிபராக ரணில் விக்ரமங்க தேர்வுசெய்யப்பட்டு பதவியேற்றார் அத்தோடு மக்கள் போராடங்கள் ஒடுக்கப்பட்டது.
அதன்பின்னரே கோட்டாபய நாடுக்கு திரும்பியிருந்தார். இந்நிலையிலேயே கோட்டாவை பிரதமராக்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
இதற்காக அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கு மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலர் முற்படுகின்றதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் கூறுகின்றன.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா
