ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்..! கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த தாய்
மொராக்கோவில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த தாய் கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளார்.
மொராக்கோவில் உள்ள காசாபிளாங்காவில் உள்ள ஏய்ன் போர்ஜா மருத்துவமனையில் அந்த பெண் பிரசவம் ஆகி உள்ளார்.
ஹலிமா சிஸ்சே என்ற பெண்ணுக்கு 9 குழந்தைகள் பிறந்து உள்ளது. சிசேயின் கர்ப்பமாக இருந்த 30 வாரங்களில் மே 4, 2021 அன்று சிசேரியன் மூலம் பிரசவம் ஆகி உள்ளது.
5 பெண் - 4 ஆண்

குழந்தைகளின் பெயர் அடாமா, ஓமோவ், ஹவா, காதிதியா, பத்தூமா என்ற 5 பெண்குழந்தைகளும் ஓமர், எல்ஹாட்ஜி, பா மற்றும் முகமது என 4 ஆண் குழந்தைகளும் பிறந்து உள்ளது.
ஒவ்வொரு குழந்தையும் 0.5 - 1 கிலோ (1.1 - 2.2 எல்பி) வரை எடையுள்ளதாக இருந்தது.
அதேவேளை ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுக்கப் போவது குறித்து அந்த பெண்ணுக்கு கூட தெரியவில்லை. மாலியில் உள்ள மருத்துவர்கள் ஹலிமா ஏழு குழந்தைகளை பெற்றடுப்பார் என்று நம்பி இருந்தனர்.
இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டு

இதனையடுத்து பிரசவத்திற்காக மாலி அரசாங்கம் அவரை மொராக்கோவில் உள்ள ஒரு சிறப்பு மருத்துவமனையில் சேர்த்தது. எனினும் ஹலிமாவுக்கு அங்கு 9 குழந்தைகள் பிறந்து உள்ளது.
இந்நிலையில், இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டு "ஆக்டோமோம்" என்ற புனைப்பெயர் கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த நாத்யா சுலேமானுக்கு எட்டு குழந்தைகள் பிறந்ததே உலக சாதனையாக இருந்த நிலையில் ஹலிமா சிஸ்சே அந்த சாதனையை முறியடித்துள்ளார்.