ஐரோப்பாவில் வெப்ப குவிமாடம்! 40 பாகையை கடக்கும் வெம்மை
ஐரோப்பாவின் வெப்ப அலை இன்று இரண்டாவது நாளாக பல நகரங்களில் கடக்கும் நிலையில் மூதாளர்கள் மற்றும் சிறார்களுக்குரிய சுகாதார எச்சரிக்கைகளும் காட்டுத்தீ உட்பட்ட திடீர் தீப்பரவல் எச்சரிக்கை முன்னறிவிப்புக்களும் விடுக்கப்பட்டுள்ளன.
வட ஆப்பிரிக்காவில் இருந்து நகர்ந்த வெப்பக் காற்று, பால்கன் பிராந்தியம் முழுவதும் பரவி நகர்ந்து வருவதால், இன்று சில இடங்களில் 40 பாகை செல்சியசை கடந்த வெப்பநிலை நிலவும் என முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
பிரான்சின் தேசிய வெப்ப அலை
பிரான்ஸ், இத்தாலி, கிரேக்கம் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகள் வெப்பத்தில் தகிக்கும் நிலையில் ஸ்பெயினின் செவில்லே நகரத்தில் இன்று வெப்பநிலை 42 பாகை செல்சியசை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தலைசகர் லண்டன் உட்பட்ட இடங்களிலும் இன்று 30 பாகைக்கு அண்மித்த வெப்பநிலை நிலவும் என எதிர்பார்க்படும் நிலையில் நாளை இன்றைவிட அதிக வெப்பநிலை நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெப்பக்குவிமாட நிலையில் உள்ள பிரான்சை பொறுத்தவரை 1947 முதல் அதன் ஐம்பதாவது தேசிய வெப்ப அலையை எதிர்கொண்டுள்ளது.
செம்மஞ்சள் எச்சரிக்கை
பிரான்ஸ் உட்பட்ட எழுபத்து மூன்று பிராந்தியங்களுக்கு இன்று செம்மஞ்சள் எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் ரோம் மற்றும் வெனிஸ் உட்பட சுமார் இருபது நகரங்களும் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.
போர்த்துகல் நாட்டில் இன்று பெரும்பாலாக பகுதிகள் செம்மஞ்சள எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன. தலைநகர் லிஸ்பனில் 42 பாகை செல்சியஸ் வெப்பநிலை இன்று கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
