நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை
நாட்டின் பல மாகாணங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (05) நண்பகல் 'அம்பர்' நிறத்திலான விசேட எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த விசேட வானிலை அறிவித்தல் இன்று நண்பகல் வெளியிடப்பட்டுள்ளதுடன் இன்று இரவு 11:00 மணி வரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டம் ஆகிய பகுதிகளுக்கே கடும் மின்னல் குறித்து ‘அம்பர்’ (Amber) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இன்று பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய கடும் மின்னல் மற்றும் தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளத் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது திறந்த வெளிகள், நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் அல்லது நீர்நிலைகளில் தங்கியிருப்பதைத் தவிர்க்கவும். மரங்களின் கீழ் தஞ்சம் அடைவதைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |