ஊர்திரும்பிய உறவுப்பாலத்தின் விளம்பர பதாதைகள் யாழ். நகரெங்கிலும்
உலகம் முழுவதும் பரந்துள்ள ஈழத்தமிழர்களுக்கான எல்லை கடந்த பேரூடகமாக விளங்கும் ஐபிசி தமிழ், தனது 29ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடி 30ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
லண்டன் மாநகரில் 29 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வானொலியாகத் தொடங்கப்பட்ட ஐபிசி தமிழ், இன்று வானொலி, தொலைக்காட்சி, இணையம் மற்றும் பிரபலமான சமூக வலைதளங்கள் ஆகியவற்றின் மூலம் இலத்திரனியல் மற்றும் டிஜிட்டல் ஊடக உலகில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த முக்கிய நிகழ்வை முன்னிட்டு, யாழ்ப்பாண நகரின் பல பகுதிகளில் இன்று முச்சக்கரவண்டிகள் மூலம் விளம்பரக் காட்சிகள் நடத்தப்பட்டன. பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த விளம்பர முயற்சி இடம்பெற்றது.
மேலும், உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களுக்கு உறவுப் பாலமாக திகழும் ஐபிசி தமிழின் மூன்று தசாப்த வெற்றிப் பயணத்தை நினைவுகூரும் வகையில், எதிர்வரும் நாட்களில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் சமூக நலத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஐபிசி தமிழின் இந்த வளர்ச்சி பயணம், உலகத் தமிழர்களை இணைக்கும் ஒரு முக்கிய ஊடகப் பாலமாக அதன் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.











| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |