இன்று இடம்பெறவுள்ள அரசியல் பிரமுகர்களின் முக்கிய சந்திப்பு!!
நாட்டின் நெருக்கடி நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக அரச தலைவருக்கும் சுயாதீன நாடாளுமன்ற குழுவினருக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு அரச தலைவர் கொள்கை ரீதியாக இணங்கி கடந்த வாரம் கட்சித்தலைவர்களுக்கும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகள், ஏனைய கட்சிகள் இல்லாத கூட்டமொன்றை நடத்துவதற்கு தமது இணக்கப்பாட்டையும் வெளிப்படுத்தி கடந்த வெள்ளிக்கிழமை முதல் தடவையாக குறித்த குழுவினர் அரச தலைவருடன் சந்திப்பினை ஏற்படுத்தியிருந்தனர்.
இதன்போது தற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், தற்போதைய அரசாங்கம் பதவி விலகுவது குறித்தும் ஆராயப்பட்டிருந்தன.
இவ்வாறானதொரு சூழலில் இன்றைய தினமும் முக்கியமான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, இந்த சந்திப்பில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பிரதிநிதிகளும் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
