ஈரானால் சிதைக்கப்பட்ட நகரத்தில் நெதன்யாகு! ஆத்திரத்தில் வெளியிட்ட எச்சரிக்கை
ஈரானால் தாக்கப்பட்ட தெற்கு இஸ்ரேலிய நகரமான அராத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பொதுமக்கள் வசிக்கும் பகுதியைத் தாக்கியதற்காக ஈரானை கடுமையாக எச்சரித்துள்ளார்.
சனிக்கிழமை அராத் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 84 பேர் காயமடைந்தனர், அவர்களில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
அத்தோடு, டிமோனா நகரமும் ஒரு தனிப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் தாக்கப்பட்டது.
ஈரானின் நோக்கம்
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நெதன்யாகு, “கடந்த 48 மணி நேரத்தில் ஈரான் பொதுமக்கள் வசிக்கும் பகுதியைத் தாக்கியுள்ளது.

அவர்கள் இதை ஒரு பெரும் படுகொலை ஆயுதமாகச் செய்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக, யாரும் கொல்லப்படவில்லை, ஆனால் அது அதிர்ஷ்டத்தால் நிகழ்ந்தது, அவர்களின் நோக்கத்தால் அல்ல. பொதுமக்களைக் கொல்வதே அவர்களின் நோக்கம்," என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
முழு உலகத்திற்கும் மிரட்டல்
மேலும், "நான் எல்லா நேரமும் எச்சரித்து வருகிறேன், இப்போது அவர்களால் ஐரோப்பாவின் ஆழமான பகுதிகளுக்குள் ஊடுருவ முடியும். அவர்கள் ஏற்கனவே சைப்ரஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் அனைவரையும் தங்கள் இலக்காகக் கொண்டுள்ளனர்." என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு, “ஈரான்,ஒரு சர்வதேச கடல்வழிப் பாதையை ஒரு எரிசக்திப் பாதையை தடுத்து, முழு உலகையும் மிரட்ட முயற்சிக்கிறது," என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அதன்படி, முழு உலகையும் அச்சுறுத்தும் இந்த ஆட்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |