ஈரான் போர் முடிவில் IRINS Bushehr - இன் உரிமை மாற்றப்படும்! மொசாடின் மறைமுக எச்சரிக்கை
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் மோதலின் விளைவாக, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஈரானிய கடற்படையின் உதவிக் கப்பலான IRINS Bushehr (422) இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தில் (Trincomalee Harbor) நடுநிலை தஞ்சம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியாழக்கிழமை (மார்ச் 5) தொலைக்காட்சி உரையில் இதை உறுதிப்படுத்தினார்.
னிதாபிமான அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
Torpedo தாக்குதல்
கடந்த 04.03. 2026 அன்று ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena (Moudge-class frigate) இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் (Galle அருகே) அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் Mark 48 Torpedo தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கடிக்கப்பட்டது.

இதில் 180 வீரர்களில் 87 பேர் உடல்கள் மீட்கப்பட்டனர். 32 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். மீதமுள்ளோர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு நீர்மூழ்கிக் கப்பலால் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட முதல் சம்பவமாக (torpedo kill) அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இதை தொடர்ந்து IRIS Dena-ஐ தோழமையாகக் கொண்டு இந்தியாவின் Milan 2026 சர்வதேச கடற்படைப் பயிற்சியில் பங்கேற்ற மற்றொரு ஈரானிய கப்பலான IRINS Bushehr (ஒரு replenishment / supply / auxiliary ship) இயந்திர பிரச்சினை என்ற காரணத்தை முன்வைத்து இலங்கைத் துறைமுகத்தில் நுழைய அனுமதி கோரியது.
மேலும் மார்ச் 5ஆம் திகதியான நேற்று இலங்கை அரசு 208 பேர் (53 அதிகாரிகள், 84 கேடட் அதிகாரிகள், 48 மூத்த வீரர்கள், 23 வீரர்கள் உட்பட) கொண்ட குழுவை முதலில் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வந்து இறக்கியது.
பின்னர் கப்பலை திருகோணமலை துறைமுகத்துக்கு (Trincomalee) அழைத்துச் சென்று கட்டுப்பாட்டில் வைத்தது.
இந்நிலையில் இன்று இலங்கை கடற்படை இதனை உறுதிப்படுத்தியது. 204 பேர் ஏற்கனவே கொழும்புக்கு கொண்டு வரப்பட்டனர். மீதமுள்ளோர் இடமாற்றம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில்தான் இஸ்ரேலின் உளவுத்துறையான மொசாட் வெளியிட்ட அறிக்கை சில எச்சிரிக்கையை இலங்கை பக்கம் திருப்பியுள்ளன.
“இரானிய கடற்படை கப்பல் IRINS Bushehr (422) ஒரு நடுநிலை நாட்டு (neutral country) துறைமுகத்தில் தன்னை உள்வாங்கி (interned itself = போர்க்காலத்தில் தற்காலிகமாக சரணடைந்து/பாதுகாப்பாக தங்கியிருப்பது) வைத்திருக்கிறது.
அது இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தில் (Trincomalee Harbor) நிறுத்தப்பட்டுள்ளது.
போர் முடியும் வரை (until the war ends) அங்கேயே இருக்கும். அப்போது (போர் முடிந்த பிறகு) அந்தக் கப்பல் வேறொரு ஆட்சியின் (another regime = இப்போதைய இரானிய அரசுக்கு பதிலாக வேறு அரசு/ஆட்சி) கட்டுப்பாட்டின் கீழ் சென்றுவிடும். ”
இதுவே மொசாட் வெளியிட்ட அறிக்கை.
Internment என்றால் என்ன
சர்வதேச கடல் போர் சட்டங்கள் (Hague Conventions & laws of naval warfare) படி:

- போரில் ஈடுபட்ட (belligerent) நாட்டின் கப்பல் நடுநிலை நாட்டின் துறைமுகத்தில் தஞ்சம் புகுந்தால், அது interned ஆகும்.
- போர் முடியும் வரை கப்பல் அங்கேயே இருக்க வேண்டும். மீண்டும் போரில் ஈடுபட முடியாது.
- ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படலாம். குழு நடுநிலை நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
இலங்கை இதை மனிதாபிமான அடிப்படையில் செய்துள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு பதிலாக திருகோணமலை துறைமுகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகம் வணிக ரீதியாக முக்கியம் வாய்ந்தது. இதன் காரணமாகவே திருகோணமலை துறைமுகம் அடையாளமிடப்பட்டது.
இது மீண்டும் அமெரிக்க தாக்குதல் அபாயத்தை குறைக்கும் நோக்கமாகக் கருதப்படுகிறது.
Another Regime என்ற கருத்து
MOSSADil தனது x தள கணக்கில் "By that time, it will be under the control of another regime" என்று மறைமுகமாக ஒரு கருத்தை தெரிவிக்கும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ஈரானில் போர் நீடித்தால் regime change (ஆட்சி மாற்றம்) நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை குறிப்பிடும் ஒரு புவிசார் அரசியல் வர்ணனை ஆகும்.
திருகோணமலை துறைமுகம் இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பான் தாக்கிய இடம். இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகியோருக்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதி.
இலங்கையின் நிலைப்பாடு
இலங்கை நடுநிலை (neutrality) கொள்கையை பின்பற்றி, அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்களை கண்டனம் செய்து, இராஜதந்திர தீர்வு கோரியுள்ளது.
ஆனால் இந்த முடிவு அமெரிக்காவிடம் இருந்து அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் இந்தியப் பெருங்கடலில் போர் விரிவடைவதை காட்டுகிறது.
எச்சரிக்கைக்கான முக்கிய காரணங்கள்
முதல் Torpedo (இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு):

IRIS Dena போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் Galle அருகே மூழ்கடிக்கப்பட்டது. 87 உடல்கள் மீட்கப்பட்டன. 32 பேர் காயமுடன் உயிர் தப்பினர். இது போர் விதிகளை மீறிய புதிய முன்னுதாரணம் என்று ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இரண்டாவது கப்பல் தப்பியோடுதல்:
IRINS Bushehr (supply/replenishment ship) "எஞ்சின் பிரச்சினை" என்ற பெயரில் தஞ்சம் கோரியது. உண்மையில் அமெரிக்க தாக்குதல் எச்சரிக்கையால் குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டது.208 வீரர்கள் (அதிகாரிகள், கேடட்கள் உட்பட) கொழும்புக்கு இறக்கப்பட்டு, கப்பல் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டது.
திருகோணமலை உலகின் மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்று.
திருகோணமலை துறைமுகம் ஆழமான இயற்கை துறைமுகம். உலக போர் இரண்டில். ஜப்பான் தாக்கிய இடம்.
இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகியோருக்கு மூலோபாய முக்கியத்துவம் வாயற்த பகுதி. இது ஈரானிய கப்பல் இங்கு தங்கியிருப்பது நடுநிலை இலங்கையை தவிர்க்க முடியாமல் போககூடிய சாத்தியங்கள் அதிகம்.
இலங்கையின் நிலைப்பாடு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க "மனிதாபிமான அடிப்படையில்" என்று கூறினாலும், அமெரிக்கா இதை நடுநிலை மீறல் என்று பார்க்க வாய்ப்பு.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா போன்றோர் "கொழும்பு அருகே ஆபத்து" என்று எச்சரித்துள்ளனர்.
சீனாவுக்கு கடன், இந்தியாவுக்கு பொருளாதார உதவி, அமெரிக்காவுக்கு இராணுவ பாதுகாப்பு என இலங்கை எல்லா திசைகளிலும் தற்போது அழுத்தத்தில் காணப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |