இஸ்ரேலுக்கு ஜெர்மனியின் ஆயுத ஆதரவு! மத்திய கிழக்கு மோதல் குறித்து கடும் எச்சரிக்கை
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கீழ் இஸ்ரேலுடன் ஜெர்மனி மேற்கொள்ளும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது என அந்நாட்டின் இடதுசாரிக் கட்சி( எதிர்க்கட்சி) நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், இது ஜெர்மனியை மத்திய கிழக்கு மோதல்களில் மேலும் ஆழமாக இழுத்துச் செல்லக்கூடும் என்றும் அவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர்கள் சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியில்,
ஏவுகணை அமைப்பு
“நாட்டில் உள்ள என்ற வானக தாயாரிப்பு நிறுவனம் தனது ஓஸ்னாப்ரூக் ஆலையில் ஏவுகணை அமைப்பு பாகங்களைத் தயாரிப்பதற்காக ஒரு இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தத் திட்டத்திற்கு ஜெர்மன் அரசாங்கம் ஆதரவளிப்பதாகவும் கூறப்படுகிறது.
நெதன்யாகுவும் அவரது பாசிச அரசும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அவர்கள் மத்திய கிழக்கு முழுவதையும் போர்க்களங்களாக மாற்றிவிட்டனர் என்று குறித்த தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த இஸ்ரேலிய அரசுக்கு இங்கு ஆயுதங்களைத் தயாரிக்க வாய்ப்பளிப்பதற்கு முன்பு, ஜெர்மானிய அரசு இரண்டு, மூன்று, நான்கு முறை யோசிக்க வேண்டும்.
ஜெர்மனியில் இஸ்ரேலிய அரசாங்கத்தின் பாதுகாப்புத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல அனுமதிப்பது, நெதன்யாகு அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் பெர்லினை உடந்தையாக்கிவிடும் என்றும் குறித்த கட்சி வட்டாரங்கள் விளக்கியுள்ளன.
ஜெர்மன் கைகளிலும் இரத்தம்
"காசாவை மட்டும் நாம் பார்த்தால், நெதன்யாகுவின் பாசிச அரசாங்கம் அங்கு ஒரு இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ளது.

அதன் விளைவாக, கொலை, வன்கொடுமை மற்றும் சில சமயங்களில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
மேலும், சமீபத்திய ஆண்டுகளில் இஸ்ரேலுக்கு இந்த ஆயுதங்களை வழங்கியதன் மூலம், ஜெர்மன் அரசாங்கத்தின் கைகளிலும் இரத்தம் படிந்துள்ளது.
தற்போதைய வானக உற்பத்தி முடிந்த பிறகு அடுத்த ஆண்டு மூடப்படும் அபாயத்தில் உள்ள ஓஸ்னாப்ரூக் தொழிற்சாலையை, இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பான அயர்ன் டோமிற்கான ஏவுகணைகள், போக்குவரத்து வாகனங்கள் மற்றும் மின்னாக்கிகள் உள்ளிட்ட பாகங்களைத் தயாரிப்பதற்காக மாற்றி அமைக்கும் ஒரு கூட்டாண்மை குறித்து ஜெர்மனியின் வாகனத் தயாரிப்பு நிறுவனம் பேசி வருவதாக தெரியவருகிறது.
குறித்த நிறுவனம் சிரமங்களை எதிர்கொண்டாலும் திவாலாகவில்லை.
ஜெர்மனியின் வாகனத் தொழில்துறையை இராணுவ உற்பத்தியை நோக்கி மாற்றுவது, அதன் தற்போதைய சவால்களுக்கு நீடித்த தீர்வை அளிக்காது.
பிற நாடுகளில் நடக்கும் போர்களை ஆதரிப்பதன் மூலம், மற்ற மக்களின் உயிர்களைப் பணயம் வைத்து வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பது பற்றி நாம் சிந்திக்கவே முடியாது," என்று அந்நாட்டின் எதிர் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்