யாழில் போதைப்பொருளுடன் சுற்றிவளைக்கப்பட்ட இளைஞர்கள்: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் நேற்று (09) கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 26 மற்றும் 28 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதனடிப்படையில், யாழ்ப்பாணம் காவல்துறை போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 20 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளையடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஜனவரி 10... உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை : தனிநாடு குறித்து சிந்தித்த ஈழத் தமிழர்கள்...! 5 நிமிடங்கள் முன்
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும்
17 மணி நேரம் முன்