அமைச்சரவை மாற்றத்தால் கவலை - அரசியல் தீர்மானம் எடுக்க தயாராகும் லொகான் ரத்வத்த
இரத்தினக்கல் மற்றும் ஆபரண கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அமைச்சரவை மாற்றம் குறித்து கவலையடைந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அவர் எதிர்காலத்தில் அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்க தயாராகி வருவதாக தெரியவருகிறது.
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த திலும் அமுனுகம அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். எஸ.பி திஸாநாயக்கவும் கைத்தொழில் அமைச்சராக அமைச்சரவையில் இணைந்துகொண்டார்.
கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்தவர்களும் இந்த அரசாங்கத்தில் கபினட் அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் கவலையடைந்துள்ளதாக லொஹான் ரத்வத்த தனது நண்பர்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பிரதமருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2015 ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த பின்னர் அவரை விட்டு பலர் வெளியேறிய போதும் தாம் அவருடன் இருந்ததாகவும் அவரைப் பாதுகாத்ததாகவும் ரத்வத்தே மேலும் தெரிவித்தார்.
