அநுரவை சந்திக்க வரும் மற்றுமொரு வெளிநாட்டு ஜனாதிபதி!
இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்ஸு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் 2026 மே 4 முதல் 5 ஆம் திகதி வரை குறித்த விஜயம் மேற்கொள்ளப்படும் என்று வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஜனாதிபதி திஸாநாயக்கவுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அத்துடன் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஈடுபாட்டை ஸ்திரப்படுத்தும் நோக்கில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படவுள்ளன.

மாலைத்தீவு ஜனாதிபதியுடன் அந்நாட்டின் முதல் பெண்மணி சஜிதா முகமது, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவையின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளும் இந்த விஜயத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |