கூட்டமைப்புடனான சந்திப்பு உத்தியோகபூர்வம் இல்லை - அதிபர் செயலகம் அறிவிப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் அதன் பேச்சாளர் அதிபர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடனான சந்திப்பு உத்தியோகபூர்வமற்றது என அதிபர் செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை அதிபர் ரணில் விக்ரமசிங்க, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் அதிபர் சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் மற்றும் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
அதிபருடனான சந்திப்பு
குறித்த சந்திப்பினை ஒத்தி வைக்குமாறு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் கடிதம் ஊடாக அதிபரிடம் கோரி இருந்தார்.
குறித்த கடிதத்திற்கு பதில் அளிக்கும் முகமாக சி.வி விக்னேஸ்வரனுக்கு அதிபர் செயலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதத்தில், இந்தச் சந்திப்பு உத்தியோகபூர்வமற்றது.
அடுத்த சந்திப்பு
எதிர்காலத்தில் , அடுத்த சந்திப்புகள் ஒழுங்கு செய்யப்படும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை , நேற்றைய தினம் நடைபெற்ற அதிபருடனான சந்திப்புக்கு, தமிழ் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி. விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரை அழைக்காது , நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் சந்திப்பை ஒழுங்கு செய்ததாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
