ஹேக்கர்களுக்கு சென்ற பெருந்தொகை டொலர்கள்! தவறிழைத்துள்ள அரச அதிகாரிகள்
திறைசேரியால் ஹேக்கர்களுக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சென்றமை அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் உள்ள மத்தள சர்வதேச விமான நிலையத்தில், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திற்கும் சிறிலங்கா ஏர்லைன்ஸுக்கும் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பின்னர், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சிறப்பு விசாரணை
அதன்படி, இந்தச் செயல்பாட்டில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட அதிகாரிகள் மீது ஒரு சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அந்த அதிகாரிகள் மீது தேவையான ஒழுங்கு நடவடிக்கை ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், எதிர்காலத்தில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 4 மணி நேரம் முன்