வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் நேபாள் ஜனாதிபதி
நேபாளத்தின் (Nepal) ஜனாதிபதி ராமசந்திர பவுடால் (Ram Chandra Poudel) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ராமசந்திர பவுடாலுக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, காத்மாண்டுவில் உள்ள மன்மோகன் இருதய ஆராய்ச்சி மற்றும் வாஸ்குலர் மாற்று மையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மாளிகை
இது தொடர்பில் ஜனாதிபதி மாளிகை வட்டாரம் கருத்து தெரிவித்துள்ளது. அதிபர் மாளிகை மேலும் தெரிவித்துள்ளதாவது, “ராமசந்திர பவுடாலுக்கு கடுமையான தலைவலி மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து அவர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
கலந்தாலோசனை
அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர், இதுவரை அவரின் உடல்நிலை சீராக இருக்கின்றது.
பவுடால், காலை ஜெனரல் இசட் குழுவின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை நடத்தவிருந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, பேச்சுவார்த்தை வரும் திங்கட்கிழமை (ஒக்டோபர் 13 )அன்று ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் மூச்சுத் திணறல் காரணமாக மார்பு தொடர்பான நோய்க்கு சிகிச்சைக்காக, பவுடால் இந்தியாவிற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். புது டில்லியில் உள்ள எய்ம்ஸில் அவர் சிகிச்சை பெற்றார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
