2024 இல் இனவாத அரசியல்வாதிகளுக்கு இடமில்லை: நீதி அமைச்சர் எடுத்துரைப்பு

Dr Wijeyadasa Rajapakshe Election Ministry of justice Sri lanka
By Sathangani Jan 02, 2024 06:31 AM GMT
Report

2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் தேர்தலை இலக்காகக்கொண்டு நாட்டுக்குள் இன, மத, மொழிப் பிரிவினையை உருவாக்க சுயநல அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.

தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தி ஜனநாயக சமூகத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, அமைதியான தேசத்தை கட்டியெழுப்பும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

புதுவருடத்திற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு  நேற்று (01) நீதி அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

விடுதலை புலிகளின் தலைவர் சொல்லிக்கொடுத்த சுயவொழுக்கம்! பின்பற்றி வாழும் மக்கள்

விடுதலை புலிகளின் தலைவர் சொல்லிக்கொடுத்த சுயவொழுக்கம்! பின்பற்றி வாழும் மக்கள்


தேர்தல் ஆண்டு 

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

''2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதை நாம் அறிவோம். அடுத்து எந்த மாதிரியான தேர்தல் வந்தாலும் இன, மத, மொழிப் பிரிவினையை உருவாக்க சுயநல, சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது.

2024 இல் இனவாத அரசியல்வாதிகளுக்கு இடமில்லை: நீதி அமைச்சர் எடுத்துரைப்பு | Not Allowed To Create Division Within The Country

ஜனநாயக சமூகத்தில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, அமைதியான தேசத்தை அமைக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அரச ஊழியர்கள் என்றவகையில் நாங்கள் ஒவ்வொரு வருடமும் உறுதிப்பிரமாணம் வழங்கினாலும் அரச ஊழியர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை.

எனினும் நீதி அமைச்சின் அதிகாரிகளாக நாங்கள் நாட்டில் இருக்கும் முன்மாதிரியான அமைச்சு என்பதை மக்கள் மத்தியில் உறுதிப்படுத்தி இருக்கிறோம்.

பராக் ஒபாமா இலங்கையில்: சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி தொடர்பில் வெளியான தகவல்

பராக் ஒபாமா இலங்கையில்: சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி தொடர்பில் வெளியான தகவல்


சர்வதேச நாணய நிதியத்தின் கடன்

அத்துடன் உலகில் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நாடுகளை பார்க்கும்போது இந்தளவு குறுகிய காலத்துக்குள் ஸ்திரநிலைக்கு வந்த வேறு நாடு இல்லை.

எமது நாட்டின் பொருளாதாரம் மிகவும் கீழ் நிலைக்கு வீழ்ச்சியடைந்தது. நாங்கள் தற்போது பொருளாதாரத்தை கட்டியெழுப்பி சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

2024 இல் இனவாத அரசியல்வாதிகளுக்கு இடமில்லை: நீதி அமைச்சர் எடுத்துரைப்பு | Not Allowed To Create Division Within The Country

2023ஆம் ஆண்டும் ஜீ.எஸ்பி பிளஸ் நிவாரணத்தை பெற்றுக்கொள்ள மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணையை பெற்றுக்கொள்ள தேவையான முக்கியமான அளவுகோல்களை பூரணப்படுத்தும் பொறுப்பை மேற்கொண்டது நீதி அமைச்சாகும்.

வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்காக கடந்த ஒன்றரை வருட காலத்துக்குள் நாங்கள் நாடவடிக்கை எடுத்தோம்.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 30 பேர் பலி : தளர்த்தப்பட்ட சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 30 பேர் பலி : தளர்த்தப்பட்ட சுனாமி எச்சரிக்கை


 60 புதிய சட்ட மூலங்கள்

மேலும் 2024ஆம் ஆண்டுக்குள் 60 புதிய சட்ட மூலங்களை அனுமதித்துக்கொள்ள தேவையான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

சுதந்திரத்துக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்ட அரசியலமைப்பு புரட்சி 21ஆம் அரசியலமைப்பு திருத்தமாகும். ஊழல் எதிர்ப்பு உள்ளிட்ட பல புதிய சட்டங்களை அனுமதித்துக்கொண்டு மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம்.

2024 இல் இனவாத அரசியல்வாதிகளுக்கு இடமில்லை: நீதி அமைச்சர் எடுத்துரைப்பு | Not Allowed To Create Division Within The Country

அதனால் மதம், மொழி, இன வர்க்கமாக பிளவுபட்டு செயற்பட்டால் நாடு என்ற வகையில் நாங்கள் எதிர்பார்க்கும் இலக்குக்கு செல்ல முடியாது.

அதனால் 2024 ஆம் ஆண்டின் முதல் வாரத்துக்குள் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலக சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் அனுமதித்துக்கொள்வோம்'' என தெரிவித்தார்.

தென் கொரிய எதிர்க்கட்சி தலைவருக்கு கத்திக்குத்து: விமான நிலையத்தில் பரபரப்பு

தென் கொரிய எதிர்க்கட்சி தலைவருக்கு கத்திக்குத்து: விமான நிலையத்தில் பரபரப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016