கிளிநொச்சியில் கால்நடைகளை வாகனத்தில் கடத்திய நபர்கள் கைது
கிளிநொச்சியிலிருந்து (Kilinochchi) புத்தளம் ( Puttalam) நோக்கி கடத்தப்பட்ட 80க்கும் மேற்பட்ட கால்நடைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா (Vavuniya) - ஓமந்தை காவல்துறையினருக்கு நேற்று (13) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட சோதனை ஒன்றை மேற்கொண்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, A9 வீதியூடாக பயணித்த இரண்டு வாகனங்களை சோதனை இடுவதற்காக காவல்துறையினரால் வழிமறித்த நிலையில் குறித்த வாகனம் தப்பிச் செல்ல முற்பட்டது.
இரண்டு நபர்கள் கைது
இந்நிலையில், குறித்த வாகனத்தை துரத்திச் சென்று வாகனத்தை மறித்து சோதனை செய்த காவல்துறையினர், வாகனத்தில் சட்டத்திற்கு முரணாக கடத்தப்பட்ட 70 ஆடுகள் மற்றும் 18 மாடுகளை மீட்டுள்ளதுடன் வாகனத்தில் பயணித்த இரண்டு நபர்களையும் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, மற்றுமொரு வாகனத்தை சோதனை செய்ததில் முல்லைத்தீவிலிருந்து (Mullaitivu) கொழும்பு (Colombo) நோக்கி கடத்தப்படவிருந்த 18 மாடுகளுடன் கூடிய வாகனத்தையும் மீட்டதுடன் அதிலும் இரண்டு நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இவ்விரண்டு சம்பவங்களிலும் கைது செய்யப்பட்ட நபர்களை விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்...பின்னணியில் அரச புலனாய்வுப் பிரிவு: கஜேந்திரன் சந்தேகம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |