சர்வதேசத்தை இலங்கைப் பக்கம் திரும்ப வைத்த ரணிலின் கைது!

CID - Sri Lanka Police Ranil Wickremesinghe Sri Lanka Police Investigation
By Dharu Aug 22, 2025 09:49 AM GMT
Report

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று குற்றப்புலனாய்வு துறையில் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் சர்வதேசத்தின் கவனத்தையும் பெற்ற விடயமாக மாறியுள்ளது.

இலங்கை அரசியலில் வரலாற்றில் கோட்டாபயவின் ஆட்சிக்கவிழ்ப்புக்கு பின்னர், உலகத்தின் கவனத்தை ஈர்த்த முக்கிய சம்பவமாக ரணிலின் கைது அமையப்பெற்றுள்ளது.

முன்னதாக சர்வதேச ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நேர்காணலின் மூலம் இலங்கையில் இடம்பெற்ற மனித படுகொலைகள் தொடர்பில் ரணில் அதிகமாக விமர்சிக்கப்பட்டார்.

இது இலங்கையில் பட்டலந்த விவகாரத்துடன் தொடர்புடைய குற்றங்களை கொண்டிருந்தது.

அல்ஜசீரா நேர்காணலில் கொதித்தெழுந்த ரணில் : வெளியேறுவேன் என கூச்சல் குழப்பம்

அல்ஜசீரா நேர்காணலில் கொதித்தெழுந்த ரணில் : வெளியேறுவேன் என கூச்சல் குழப்பம்

நிதிமுறைகேடு

2022 - 2024 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க நிதிமுறைகேடு ஒன்று தொடர்பாக இன்று சி.ஐ.டியில் முன்னிலையாகியிருந்தார்.

சர்வதேசத்தை இலங்கைப் பக்கம் திரும்ப வைத்த ரணிலின் கைது! | Ranil S Arrest Shocked The World

முன்னாள் ஜனாதிபதி ரணில், தனது பதவிக் காலத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி லண்டனுக்குச் சென்றமை தொடர்பில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் முக்கிய பிராந்தியத்திற்கு உரிமைகோரும் விஜய்!

இலங்கையின் முக்கிய பிராந்தியத்திற்கு உரிமைகோரும் விஜய்!

ஊழல் முறைப்பாடு

முன்னதாக 2025 ஏப்ரல் மாதம், ரணில் விக்ரமசிங்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார். இது, ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான ஊழல் முறைப்பாட்டுடன் தொடர்புடையது.

சர்வதேசத்தை இலங்கைப் பக்கம் திரும்ப வைத்த ரணிலின் கைது! | Ranil S Arrest Shocked The World

2016 ஆம் ஆண்டு அரச வங்கியில் நிலையான வைப்புக் கணக்கை முதிர்ச்சியடைவதற்கு முன்பு திரும்பப் பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக ரணில் விசாரணைக்கு முன்னதாக அழைக்கப்பட்டார்.

ரணில் இந்த விடயத்தில் தலையிட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பட்டலந்த கொலைகளின் பின்னணியில் ரணில் : அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள்

பட்டலந்த கொலைகளின் பின்னணியில் ரணில் : அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள்

குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணை

மேலும், 2025 ஓகஸ்ட் 19 அன்று, ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (CID) அழைக்கப்பட்டார்.

சர்வதேசத்தை இலங்கைப் பக்கம் திரும்ப வைத்த ரணிலின் கைது! | Ranil S Arrest Shocked The World

இது முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் முறைப்பாடு தொடர்பாகவும், முந்தைய ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகள் குறித்த விசாரணையாகவும் இது அமைந்திருந்தது. அவர் 2025 ஜூன் 11 அன்றும் CID-யில் முன்னிலையாகியிருந்தார்.

ரணிலின் பிணை ஒத்திவைப்பு!

ரணிலின் பிணை ஒத்திவைப்பு!

தனிப்பட்ட பயணச் செலவு

2023 செப்டம்பரில் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய இராச்சியத்துக்கு மேற்கொண்ட தனிப்பட்ட பயணத்தில், ஒரு பணியாளருக்கு நாளொன்றுக்கு 1000 பவுண்டு சம்பளமாக வழங்கப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குற்றம்சாட்டினார்.

சர்வதேசத்தை இலங்கைப் பக்கம் திரும்ப வைத்த ரணிலின் கைது! | Ranil S Arrest Shocked The World

இலங்கையின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு இது பொருத்தமற்றது என விமர்சிக்கப்பட்டது. இது தொடர்பாக முழுமையான விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

சி.ஐ.டி விசாரணையால் ரணிலுக்கு காத்திருக்கும் சிக்கல்!

சி.ஐ.டி விசாரணையால் ரணிலுக்கு காத்திருக்கும் சிக்கல்!

நுகர்வோர் விவகார அதிகாரசபை நியமனம்

மேலும், ரணில் தலைமையிலான அரசாங்கம், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணைப் பிரிவுத் தலைவரை சட்டவிரோதமாக நியமித்ததாகக் கண்டறியப்பட்டது.

இதற்கு நிதியமைச்சு அல்லது முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி பெறப்படவில்லை என்றும் இதனால் குறித்த பிரிவு கலைக்கப்பட்டது எனவும் கூறப்பட்டது.

சர்வதேசத்தை இலங்கைப் பக்கம் திரும்ப வைத்த ரணிலின் கைது! | Ranil S Arrest Shocked The World

ரணில் 2025 ஏப்ரல் 10 அன்று ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில், இந்த விசாரணை தொடர்பான தகவல்களை அறிந்திருப்பதாகவும், அதில் தான் தலையிட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.

மேலும், 2025 ஏப்ரல் 28 அன்று, ரணில் ஆணைக்குழுவில் முன்னிலையாகி மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.

அவர், அமைச்சர் சமந்த வித்தியாரத்னவின் கருத்துகளால் சாமர சம்பத்தின் சிறப்புரிமைகள் மீறப்பட்டதாக அவரது மனைவி கேட்டதாகவும், ஆனால் தான் ஒரு சட்டத்தரணியாக எந்த வெளிப்படுத்தல்களையும் செய்யவில்லை என்றும் கூறினார்.

விசாரணைக்கு தயார்..! ரணில் அதிரடி அறிவிப்பு

விசாரணைக்கு தயார்..! ரணில் அதிரடி அறிவிப்பு

தவறாக சித்தரிக்கப்பட்ட குற்றச்சாட்டு

மேலும், 2025 மே 18 அன்று, ஆணைக்குழுவின் குற்றச்சாட்டுகளை ரணில் முற்றாக மறுத்தார் நீதிமன்றத்தில் தன்னைப் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும், குற்றச்சாட்டுகளில் சட்டரீதியான குறைபாடுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 148, 149, மற்றும் 150 ஆவது உறுப்புரைகளை மேற்கோள் காட்டி, பொது நிதி தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும், நிலையான வைப்பை திரும்பப் பெறுவது சட்டப்படி மாகாண வரவுசெலவு திட்டத்துக்கு பயன்படுத்தப்படலாம் என்றும் வாதிட்டார்.

சர்வதேசத்தை இலங்கைப் பக்கம் திரும்ப வைத்த ரணிலின் கைது! | Ranil S Arrest Shocked The World

அதனை தொடர்ந்து 2025 ஆகஸ்ட் 19 அன்று, ரணில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ரணில் முன்னிலையாகியிருந்தார். ரணில் தலைமையிலான அரசாங்கம், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணைப் பிரிவுத் தலைவரை சட்டவிரோதமாக நியமித்ததாகக் கண்டறியப்பட்டது.

இதற்கு நிதியமைச்சு அல்லது முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி பெறப்படவில்லை, இதனால் அந்தப் பிரிவு கலைக்கப்பட்டது.

பொருளாதார சிக்கன நடவடிக்கைகள், அரசியல் ஸ்திரமின்மை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் நாடு போராடிக்கொண்டிருந்த வேளையில், இலங்கையின் முன்னாள் இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைதியாக ஒரு வித்தியாசமான நற்பெயரை வளர்த்துக் கொண்டார்.

சிஐடியிலிருந்து வெளியேறிய ரணிலின் செயலாளர்

சிஐடியிலிருந்து வெளியேறிய ரணிலின் செயலாளர்

வெளிநாட்டுப் பயணங்கள்

நாடாளுமன்றத்தில் இருப்பதை விட ஒரு வீட்டில் இருப்பது போன்ற நற்பெயரைப் பெற்றார் .

விக்ரமசிங்கவின் உலகளாவிய ஈடுபாடுகளின் முறிவு, நெருக்கடி மேலாண்மையை விட உயர் சமூக ராஜதந்திரத்திற்கான ஒரு அறிக்கையைப் போலவே தெரிகிறது.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி,

2022 ஆம் ஆண்டில் , கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலுக்கு பிறகு, விக்ரமசிங்கே 63 நபர்களுடன் 4 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டார். இதற்காக ரூ. 130 மில்லியன் செலவிடப்பட்டது .

சர்வதேசத்தை இலங்கைப் பக்கம் திரும்ப வைத்த ரணிலின் கைது! | Ranil S Arrest Shocked The World

2023 ஆம் ஆண்டில் , இது 14 வெளிநாட்டு சுற்றுப்பயணங்களாகப் பெருகி, 252 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர், இதற்கு ரூ. 578 மில்லியன் செலவானது .

2024 ஆம் ஆண்டுக்குள் , நிதி விவேகத்திற்கான உள்நாட்டு அழைப்புகள் அதிகரித்து வந்த போதிலும், 111 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 5 வெளிநாட்டு வருகைகள் தொடர்ந்தன, இதனால் மேலும் ரூ. 300 மில்லியன் செலவானது .

ஒட்டுமொத்தமாக, மூன்று ஆண்டுகளில் 426 நபர்கள் அரசு நிதியுதவியுடன் கூடிய பயணத்தில் பங்கேற்றனர். சராசரியாக ஒரு பயணத்திற்கு கிட்டத்தட்ட 20 தோழர்கள் . நியூயார்க்கிலிருந்து டோக்கியோவிற்கும், பிரஸ்ஸல்ஸிலிருந்து டாவோஸுக்கும், விக்ரமசிங்கே பரிவாரங்கள் ஒரு அரச பயணக் கூட்டத்தின் அனைத்து ஆரவாரங்களுடனும் நகர்ந்தன.

பிள்ளையானால் ரணிலின் பாதுகாப்பு தலைமை அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை

பிள்ளையானால் ரணிலின் பாதுகாப்பு தலைமை அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை

அரசு நிதி மோசடி

மேலும், , அரச குடும்பத்தைப் போலல்லாமல், இந்தப் பயணங்கள் செந்த பணத்தால் அல்ல, மாறாக இலங்கையின், வரி செலுத்தும் பொதுமக்களின் பணப்பைகளால் நிதியளிக்கப்பட்டன என தற்போதைய ஆளும் தரப்பு குற்றம் சுமத்தியிருந்தன.

இந்த வெளிப்பாடுகள் வெறும் நிகழ்வுகள் மட்டுமல்ல - அவை இப்போது செயலில் உள்ள குற்றவியல் விசாரணைகளுக்கு உட்பட்டவை. அது இன்று ரணிலின் கைதுடன் வந்து இணைந்துள்ளது.

சர்வதேசத்தை இலங்கைப் பக்கம் திரும்ப வைத்த ரணிலின் கைது! | Ranil S Arrest Shocked The World

கடந்த காலங்களில் சிஐடி துப்பறியும் நபர்கள் அரசு நிதியை தவறாகப் பயன்படுத்துதல், மோசடி மற்றும் அதிகப்படியான பயணக் கொடுப்பனவுகள் பற்றிய தடயங்களைத் தேடுகின்றனர்.

நீதிமன்ற பதிவுகள் பல வழக்கு கோப்புகள், 400 க்கும் மேற்பட்ட விடயங்கள் அவர்களால் திறக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்துகின்றன.

ஒவ்வொன்றும் இந்த பயணங்களின் கலவை, செலவு மற்றும் நோக்கம் (அல்லது அதன் பற்றாக்குறை) ஆகியவற்றை ஆவணப்படுத்துகின்றன.

ஏர் ரணில் ஊழல்

இந்த அத்துமீறல்கள் பற்றிய செய்திகள் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆளும் தரப்புகள் இதை "ஏர் ரணில் ஊழல்" என்று அழைத்துள்ளனர்.

சர்வதேசத்தை இலங்கைப் பக்கம் திரும்ப வைத்த ரணிலின் கைது! | Ranil S Arrest Shocked The World

அதே நேரத்தில் சாதாரண இலங்கையர்கள் மண்ணெண்ணெய்க்காக வரிசையில் நின்றபோது சொகுசு பயணங்களை ரணில் மேற்கொண்டதாகவும். இது மிகவும் கொடூரமானது, பொதுமக்கள் விமர்சித்திருந்தனர்.

மீண்டும் இந்தியா பறக்கிறார் ரணில்

மீண்டும் இந்தியா பறக்கிறார் ரணில்

சீர்திருத்தவாத, ஊழல் எதிர்ப்பு

சீர்திருத்தவாத, ஊழல் எதிர்ப்புக் கொள்கையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட NPP அரசாங்கம் , "ஏர் ரணில்" வழக்கு மற்ற ஊழல்களைப் போல புதைக்கப்படாது என்று உறுதியளித்தது.

முன்னதாக பொருந்தக்கூடிய இடங்களில் குற்றவியல் வழக்குகளை உருவாக்க , CID கண்டுபிடிப்புகளுடன் இணைந்து தணிக்கையாளர்-தலைமை அறிக்கைகளை பயன்படுத்தப்படுத்தியிருந்தன.

சர்வதேசத்தை இலங்கைப் பக்கம் திரும்ப வைத்த ரணிலின் கைது! | Ranil S Arrest Shocked The World

முன்னதாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, "எவ்வளவு அனுபவம் வாய்ந்தவராக இருந்தாலும் சரி, மூத்தவராக இருந்தாலும் சரி, யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள்.

நாட்டின் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அதற்கு இழப்பீடு கோரப்படும்.. தவறாக செலவிடப்பட்ட நிதியில் குறைந்தபட்சம் ஒரு பகுதியையாவது மீட்டெடுப்பதும், எதிர்கால அனைத்து அதிகாரப்பூர்வ பயணங்களுக்கும் நிரந்தர தணிக்கை கட்டமைப்பை நிறுவுவதும் இறுதி நோக்கமாகும்” என்றார்.

ஆனால் நிதி மீட்க்கப்பட விபரங்கள் இது வரை வரவில்லை என்றாலும், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள் என்ற கூற்று உண்மையாகியுள்ளது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025