இலங்கையில் மூடப்பட்ட பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் - வெளியான அறிவிப்பு!
இலங்கையில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களின் செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய அதிகாரிகளுக்கிடையிலான மீளாய்வுக் கூட்டத்தில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
விதிமுறைகளை மீறி எரிபொருள் விநியோகத்தை மேற்கொண்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் செயற்பாடுகளே இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மீளாய்வுக் கூட்டம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR) முறையைப் பின்பற்றாமல் எரிபொருளை விநியோகம் செய்த பல எரிபொருள் நிலையங்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக குறித்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய 105 பில்லியன் ரூபாவை பெறுவதற்கான வழிகள், எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிப்பது மற்றும் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்களை தொடர்ச்சியாக செயல்படுத்துவது போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.