யாழில் குத்தி கொல்லப்பட்ட கடை உரிமையாளர்: மதுபோதையில் இளைஞர்களின் அடாவடி
யாழில் (Jaffna) கத்திக்குத்துக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் சுண்ணாகம் காவல் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஏழாலை கிழக்கு பகுதியை சேர்ந்த சிங்காராவேல் தானவன் எனும் 35 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மது போதை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த நபரின் கடைக்கு மது போதையில் வருகை தந்த இரு இளைஞர்கள் மிக்சர் தருமாறு கேட்டுள்ளனர்.
இந்தநிலையில், மிக்சர் குரிய பணத்தை தருமாறு கடை உரிமையாளர் கேட்ட போது இளைஞர்களுக்கும் மற்றும் கடை உரிமையாளருக்கும் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது கடை உரிமையாளர் மீது இளைஞர்கள் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதையடுத்து, கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது தொல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் சுண்ணாகம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
