கொழும்பில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம்
கொழும்பில் நாளையதினம்(28.04.2026) விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
உலக சமாதான பாத யாத்திரையின் இறுதி நிகழ்வு நாளையதினம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள நிலையில், இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
குறித்த நிகழ்வு, சுதந்திர சதுக்க வளாகத்தில் மாலை 04 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
போக்குவரத்துகளை கட்டுப்படுத்த தீர்மானம்
இதன்போது, கொழும்பு போக்குவரத்துப் பிரிவு, நிகழ்வு நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

மேலும், சூழ்நிலைகளைப் பொறுத்து நாளை காலை 11 மணி முதல் குறிப்பிட்ட சில வீதிகளில் போக்குவரத்துகளை கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பண்டாரநாயக்க சுற்றுவட்டப் பகுதியில் இருந்து, பொரள்ளை சந்தி வரை, பேஸ்லைன் வீதி, மருதானை வீதி, நந்ததாச கொடகொட மாவத்தை, வோட் பிளேஸ், சொய்சா சுற்றுவட்டம், லிப்டன் சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, எஃப். ஆர். சேனநாயக்க மாவத்தை, சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர மாவத்தை, ஹோர்டன் சுற்றுவட்டம், நந்தா மோட்டார்ஸ், சுதந்திர சதுக்க வீதி, பிரேமசிறி கேமதாச மாவத்தை, கேம்பிரிட்ஜ் பிளேஸ், கிளாஸ் ஹவுஸ், மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை, நூலக சந்தி, மால் வீதி, பித்தளை சந்தி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, முத்தையா வீதி, பேபுரூக் வீதி, ஸ்டேபிள் வீதி, கங்காராம விகாரை வீதி மற்றும் சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்துகளை கட்டுப்படுத்த தீர்மானிக்கப்படவுள்ளது.
மேலும், குறித்த நேரத்தின்போது போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, வாகன சாரதிகளும் பொதுமக்களும் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு இலங்கை காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 5 மணி நேரம் முன்