பாரிய ஊழல் குற்றச்சாட்டு! சிக்கலுக்குள்ளாகியுள்ள மனுஷ உள்ளிட்ட அதிகாரிகள்

Sri Lanka Law and Order Foreign Employment Bureau
By Shalini Balachandran Sep 17, 2025 05:19 AM GMT
Report

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் (Sri Lanka Bureau of Foreign Employment) பணியாற்றிய உயர் அதிகாரிகள் குழு விரைவில் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நேற்று (16) கொழும்பு (Colombo) தலைமை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்த காலத்தில் பணியாற்றியவர்களே இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர்.

யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்: காவல்துறையினர் மீது தாக்குதல்: இருவர் காயம்

யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்: காவல்துறையினர் மீது தாக்குதல்: இருவர் காயம்

பணியக அதிகாரிகள்

இந்தநிலையில், மனுஷ நாணயக்காரவின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றிய ஷான் யஹம்பத் குணரத்னவுக்கு எதிராக பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாரிய ஊழல் குற்றச்சாட்டு! சிக்கலுக்குள்ளாகியுள்ள மனுஷ உள்ளிட்ட அதிகாரிகள் | Sri Lanka Foreign Job Bureau Corruption Arrests

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளுக்கான வெளியூர் பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நிறுவனத்திலிருந்து 4.3 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதால், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தனிப்பட்ட செயலாளரை விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மோடியின் பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி

மோடியின் பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி

நீதிமன்றத்தில் முன்னிலை

இந்தக் கோரிக்கையை சந்தேக நபரின் சார்பாக முன்னிலையான ஜனாதிபதி வழக்கறிஞர் நளிந்திர இந்திரதிஸ்ஸ மற்றும் சட்டத்தரணி பிரதீப் கமகே உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு கடுமையாக எதிர்த்துள்ளனர்.

பாரிய ஊழல் குற்றச்சாட்டு! சிக்கலுக்குள்ளாகியுள்ள மனுஷ உள்ளிட்ட அதிகாரிகள் | Sri Lanka Foreign Job Bureau Corruption Arrests

அத்தோடு, தனது கட்சிக்காரர் இதற்கு முன்பு இதேபோன்ற சூழ்நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்பு பிணையில் விடுவிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதி முறைமையில் பாரிய மாற்றம்! அநுரவுக்கு பின்னர் எவருக்கும் இடமில்லை

ஜனாதிபதி முறைமையில் பாரிய மாற்றம்! அநுரவுக்கு பின்னர் எவருக்கும் இடமில்லை

கூடுதல் பிணை

இதனடிப்படையில், சந்தேக நபருக்கு எதிரான இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையை நிராகரிக்குமாறும் மற்றும் நியாயமற்ற செயல்முறைக்கு இடமளிக்காமல் நீதிமன்றத்தை நாடுமாறும் சட்டத்தரணி நளிந்திர இந்திரதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

பாரிய ஊழல் குற்றச்சாட்டு! சிக்கலுக்குள்ளாகியுள்ள மனுஷ உள்ளிட்ட அதிகாரிகள் | Sri Lanka Foreign Job Bureau Corruption Arrests

இந்த விடயங்களை பரிசீலித்த தலைமை நீதவான், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையை நிராகரித்து சந்தேக நபரை ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு கூடுதல் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர் கோரியதாகக் தெரிவிக்கப்படும் ரூபாய் ஒரு மில்லியன் தொகையை ஆதாரமாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் குதித்துள்ள மின்சார சபை ஊழியர்கள்

சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் குதித்துள்ள மின்சார சபை ஊழியர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026