சிறுமியை கடத்திய சிறிலங்கா கடற்படை சிப்பாய்
பிலியந்தலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பலன்வத்தை பகுதியில் நேற்று முன்தினம் (ஜன. 14) காலை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் பதின்ம வயது சிறுமியை கடத்திச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் நேற்று (ஜன. 15) பிலியந்தலை காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதுடன், காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
திருமணமான சிப்பாய்க்கு சிறுமியுடன் காதல்
கடத்தலை மேற்கொண்ட சந்தேக நபர், மதவாச்சி பிரதேசத்தில் வசிக்கும் கடற்படை சிப்பாய் திருமணமானவர் என தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்ட சிறுமியுடன் காதல் உறவை வளர்த்து வந்ததாகவும்கடந்த ஆறு மாத காலத்திற்கு முன்னதாக அந்த உறவை முறித்துக் கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பல சந்தர்ப்பங்களில் மிரட்டல்
இந்நிலையில், கடத்தப்பட்ட சிறுமிக்கு சந்தேக நபர் பல சந்தர்ப்பங்களில் மிரட்டல் விடுத்துள்ளதாக காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.