இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு : சுகாதார அமைச்சு அறிவிப்பு
தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் இலங்கை மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதுடன் குழந்தை இறப்பு வீதமும் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் நோய் எதிர்ப்புத் தன்மையில் இலங்கை மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பிரதான தொற்றுநோய் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்தார்.
நாளை (24) முதல் ஆரம்பமாகும் உலக நோய் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே வைத்தியர் பாலித கருணாபேம குறிப்பிட்டார்.
தேசிய தடுப்பூசி திட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில், "நாங்கள் ஏப்ரல் 24 முதல் 30 வரை உலக நோய் எதிர்ப்பு வாரத்தைக் கொண்டாடுகிறோம். நோய் எதிர்ப்புத் தன்மையில் இலங்கை மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. 1978 ஆம் ஆண்டு முதல் எமது நாட்டில் தேசிய தடுப்பூசி திட்டம் நடைமுறையில் உள்ளது.

இதன் காரணமாக தடுப்பூசிகள் மூலம் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். போலியோ, பிறந்த குழந்தைகளுக்கான Neonatal tetanus மற்றும் ருபெல்லா போன்ற நோய்களை இலங்கையிலிருந்து ஒழிக்க முடிந்தது.
தடுப்பூசிகள் காரணமாக ஏனைய நோய்களைத் தடுத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்காரணமாக, கடந்த 15 ஆண்டுகளில் ஆயுட்காலம் அதிகரிக்கவும், குழந்தை இறப்பு வீதம் குறையவும் தேசிய தடுப்பூசி திட்டம் முக்கியமானதாக அமைந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |