யாழில் காவல்துறையினருக்கே மதுபானம் விற்றவர் கைது!
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Kajinthan
வட்டுக்கோட்டையில் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை வீட்டில் வைத்து விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு மதுபானத்தை விற்பனை செய்த போதே இன்றையதினம்(27.01) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கை
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தனவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சான்றுப் பொருட்களுடன் வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளார்.
அதன்படி, அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
9ம் ஆண்டு நினைவஞ்சலி