யாழில் பொய்களை பரப்பிய அமைச்சர் பிமல்! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

Jaffna Gajendrakumar Ponnambalam Bimal Rathnayake
By Theepan May 04, 2026 06:45 AM GMT
Report

தையிட்டி விகாரை சட்ட விரோதமான முறையில் தனியார் காணிகளை அபகரித்து கட்டப்பட்டுள்ளது என நயினாதீவு விகாராதிபதியும் யாழ் நாகவிகாராதியும் ஏற்கனவே தெளிவாக கூறிய பின்னரும் அமைச்சர்  பிமல் ரத்நாயக்க யாழில் பொய்களை கூறுவதை நிறுத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விமர்சித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (03.05.2026) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “தமிழ் மக்களின் காணிகளை சட்டவிரோதமான முறையில் அபகரித்து தையிட்டியில் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டுமானத்துக்கு எதிராக போராடும் மக்களுக்கு குரல் கொடுப்பதை யாழ் மே தின கூட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க இனவாதம் என்கிறார்.

கொழும்பு சட்டவிரோத நிதி மோசடி ; 120 வெளிநாட்டவர்களுக்கு விளக்கமறியல்

கொழும்பு சட்டவிரோத நிதி மோசடி ; 120 வெளிநாட்டவர்களுக்கு விளக்கமறியல்

உரிமைக்கான போராட்டம்

மக்களின் காணியை மக்களுக்கே தெரியாமல் இராணுவத்தினரால் சட்டவிரோதமாக பிடித்து கட்டுமானம் ஒன்றை கட்டி அதற்கு திஸ்ஸ விகாரை என்ற பெயரை வைத்துள்ளனர்.

யாழில் பொய்களை பரப்பிய அமைச்சர் பிமல்! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு | Tamil Party Is Acting Racistly On The Tahiti Issue

இவற்றையெல்லாம் அறிந்து விட்டு அறியாதவர் போல் தையிட்டி விவகாரத்தில் தமிழ் கட்சி இனவாதமாக செயல்படுகிறது என மேடையில் பேசுகிறார்.

தையிட்டியில் மக்களின் காணியை திருட்டுத்தனமாக அபகரித்து கட்டப்பட்ட சட்ட விரோத கட்டுமானத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தை ஆரம்பித்த நிலையில் நாமும் தமிழ் தேசிய பேரவையும் ஆதரவை வழங்கி அவர்களுடன் நில உரிமைக்கான போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

இதனைப் பொறுக்க முடியாத தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் பிமல் ரத்நாயக்க யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மே தின கூட்டத்தில் தையிட்டு காணி அளவீட்டை இனவாத தமிழ் தலைமைகள் குழப்புவதாக ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார்.

வெளியாகும் தேர்தல் முடிவுகள் : 107 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை

வெளியாகும் தேர்தல் முடிவுகள் : 107 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை

தையிட்டி மக்கள் தமது நிலத்துக்காக போராடுகிறார்கள் 

மக்களின் காணியை அபகரித்ததை மக்களிடம் திருப்பிக் கொடுக்க முடியாத அரசாங்கம் அதற்கு எதிராக மக்களுடன் சேர்ந்து போராடும் எம்மை இனவாதிகள் என்கிறார்கள்.

யாழில் பொய்களை பரப்பிய அமைச்சர் பிமல்! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு | Tamil Party Is Acting Racistly On The Tahiti Issue

இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் சட்டத்தரணிகள் இருக்கின்ற நிலையில் அவர்களிடம் நான் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன்.

தையிட்டி மக்கள் தமது நிலத்துக்காக போராடுகிறார்கள் அவர்கள் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்கள். ஆனால் சிலர் மட்டும் அவர்களின் போராட்டத்தோடு தொடர்ந்தும் பயணிக்கின்றனர்.

சட்டத்தரணிகளுக்கும் பாரிய பொறுப்பு இருக்கிறது, நீதிமன்றத்தில் சட்டத்தை பேச வேண்டும், அல்லது மக்களிடம் சட்டம் தொடர்பான அறிவை போதிக்க வேண்டும்.

முல்லைத்தீவில் இரு கடற்றொழிலாளர்கள் மாயம் ; தேடுதல் நடவடிக்கை தீவிரம்

முல்லைத்தீவில் இரு கடற்றொழிலாளர்கள் மாயம் ; தேடுதல் நடவடிக்கை தீவிரம்

இனவாதத்தை நாங்கள் தொடர்ந்தும் செய்வோம்

இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் நிலத்தை இழந்த மக்களுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போராடும் போது அரசியல் சாயம் பூசப்படுகிறது நீங்கள் சட்டத்தரணிகள் நீங்கள் அந்தப் போராட்டத்திற்கு சென்று மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள். அதை நீங்கள் செய்ய வேண்டிய கடமையும் இருக்கிறது.

யாழில் பொய்களை பரப்பிய அமைச்சர் பிமல்! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு | Tamil Party Is Acting Racistly On The Tahiti Issue

ஆகவே உரிமைக்கான போராட்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லும் எம்மை இனவாதிகள் என தெற்கு சித்தரிக்கும் ஆனால் அந்த இனவாதத்தை நாங்கள் தொடர்ந்தும் செய்வோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் : பா.ஜ.க முன்னிலை... மம்தா பானர்ஜி பின்னடைவு

மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் : பா.ஜ.க முன்னிலை... மம்தா பானர்ஜி பின்னடைவு

வலுக்கட்டாயமாக செய்வேன்: ஹோர்முஸ் நீரிணை திறப்பு: டரம்பின் அதிரடி அறிவிப்பு

வலுக்கட்டாயமாக செய்வேன்: ஹோர்முஸ் நீரிணை திறப்பு: டரம்பின் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019