மீள பெறப்பட்ட மகிந்தானந்த அறக்கட்டளையின் சொத்துக்கள்
சுமார் 20 ஆண்டுகளாக குத்தகை அடிப்படையில் இயங்கி வந்த மகிந்தானந்த அறக்கட்டளையின் உடமைகள் மீண்டும் தொடருந்து திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, மகிந்தானந்த அறக்கட்டளையின் செயலாளர் சமிகா தர்மதிலக, அறக்கட்டளையின் அசையும் அசையா சொத்துக்களை தொடருந்து திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தாக தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு
தொடருந்து திணைக்களத்திற்குச் சொந்தமான நிலத்தில் இயங்கி வந்த மகிந்தானந்த அலுத்கமகே அறக்கட்டளை மற்றும் அதனுடன் தொடர்புடைய நிலத்தை, ஒரு மாதத்திற்குள் தொடருந்து திணைக்களத்திடம் மீண்டும் ஒப்படைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கமைய, குறித்த பணி நேற்று காலை (02.05.2026) மகிந்தானந்த அறக்கட்டளையின் செயலாளர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் இந்த நிலத்தை ஒரு பொதுச் சந்தை மற்றும் பொதுமக்களுக்குப் பயனளிக்கும் பிற நிறுவனங்களுக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |