வவுனியாவில் சிறுவர் பூங்காவில் ரவுடிகள் தாக்குதல் இருவர் காயம்!
vavuniya
attack
injured
children park
By Sumithiran
வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் இன்று மாலை மதுபோதையில் நுழைந்த மூன்றுபேர் பூங்காவில் பணியாற்றிவரும் முதியவர் உட்பட இருவரை தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்றனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், NP AAS 0351 என்ற இலக்கமுள்ள முச்சக்கர வண்டி ஒன்றில் சிறுவர் பூங்காவிற்குள் நுழைந்த குழுவினர் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த முதியவரை கண்மூடித்தனமாக தாக்கினர்.
இதனை அவதானித்த நபர் ஒருவர் அதனை தடுக்க முற்பட்டபோது அவரையும் தாக்கி காயப்படுத்தியதுடன் அவரது பெறுமதிக்க தொலைபேசியையும் உடைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அவசர காவல்துறைக்கு தகவல் தெரிவித்த போதும் நீண்டநேரமாகியும் சம்பவ இடத்திற்கு அவர்கள் சமுகமளிக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்