கொள்ளி வைக்ககூட ஒரு பிள்ளை இல்லை..! கதறும் 4 மாவீரர்களின் தாய், தந்தை
இலங்கையில் தற்போதைய நிலையில் சாதாரண நிலையை உடைய மக்களே அன்றாட உணவிற்கு பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
வறுமை எந்த அளவுக்கு கொடுமையானது என்பது ஏழைகளாக பிறந்து வளர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து உணர்ந்தவர்களுக்கே தெரியும்.
அவ்வாறான குடும்பங்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல. ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும், மக்களுக்கான ஊடகங்களுக்கும் உண்டு.
இப்படி வறுமையில் வாழும் குடும்பங்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
அந்தவகையில், முல்லைத்தீவு - தேராவில் பகுதியில் வசிக்கும் “4 மாவீரர்களை மண்ணுக்காக கொடுத்த” ஒரு குடும்பத்தின் நிலையை, அவர்களது தேவைகளை வெளிக்கொணர்கிறது ஐ.பி.சி தமிழின் 'உறவுப்பாலம்' நிகழ்ச்சி
ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் - 104