ஈரானுடனான மோதலில் 365 அமெரிக்கப் படையினர் காயம் : பென்டகன் தகவல்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து முன்னெடுத்து மோதல்களின் போது 365 அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளதாக பென்டகன் (Pentagon) தெரிவித்துள்ளது.
பென்டகன் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, தரைப்படை, வானூர்திப்படை, கடற்படை உள்ளிட்ட நான்கு பிரிவுகளையும் சேர்ந்த 365 படையினர் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் தரைப்படையைச் சேர்ந்த 247 பேரும், கடற்படையை சேர்ந்த 63 வீரர்களும், வானூர்திப்படையை சேர்ந்த 36 பேரும், மரைன் படைப்பிரிவை சேர்ந்த 19 வீரர்களும் படுகாயமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதம் ஆரம்பமான போர்
மேலும், இந்தப் போர் நடவடிக்கைகளின் காரணமாக இதுவரை 13 அமெரிக்கப் படையினர் உயிரிழந்துள்ளதாகவும் பென்டகன் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி போர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வெள்ளிக்கிழமை வரையான காலப்பகுதிக்குள் ஏற்பட்ட இழப்புகளே இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெள்ளிக்கிழமை அன்று ஈரானியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானங்களில் இருந்த பணியாளர்கள் இந்த எண்ணிக்கையில் அடங்குவார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 5 நாட்கள் முன்