அனுருத்த பண்டார உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
சமூக ஊடக செயற்பாட்டாளரான அனுருத்த பண்டார தம்மை கைது செய்து தடுத்து வைத்ததற்கு எதிராக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் (FR) மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில் இழப்பீடாக 100 மில்லியன் ரூபாவையும் கோரியுள்ளார். இம்மாத தொடக்கத்தில், ‘கோட்டா கோ ஹோம்’ என்ற முகநூல் பக்கத்தை உருவாக்கி, இயக்கியதற்காக அனுருத்த பண்டார மோதர காவல்துறை குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
அவர் திடீரென காணாமல் போனதையடுத்து, பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மோதர குற்றத் தடுப்பு பிரிவினர் அவர் கைது செய்யப்பட்டதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
அனுருத்த பண்டார, தம்மைக் கைது செய்தமையும், தடுத்து வைக்கப்பட்டமையும் தனது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் எனக் கருதி உச்ச நீதிமன்றத்திடம் தீர்ப்பு வழங்கக் கோரி நேற்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

