மாகாவலி ஆற்றில் தோன்றிய மாயமான மாணவர்களின் சடலங்கள்!
கண்டி - தென்னகும்பும்புர பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு பாடசாலை மாணவர்களின் உடல்கள் தென்னகும்பும்புர பாலத்திலிருந்து சுமார் 2 1/2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குருதெனிய பகுதியில் மகாவலி ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 14 மற்றும் 13 வயதுடைய கே. ஜெகதீஸ் மற்றும் முகமது மில்ஹான் என்ற இரண்டு மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.
மீனவரின் வாக்குமூலம்
குறித்த இரண்டு மாணவர்களும் நேற்று (09) மாலை திகன பகுதிக்கு வளர்ப்பு மீன் வாங்கச் செல்வதாகக் கூறி வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதற்கிடையில், இரண்டு மாணவர்களும் நேற்று (08) மகாவலி ஆற்றிலுள்ள பாறைகள் மீது இருந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த ஒரு மீனவர் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார்.
அப்போது, மீனவர் இரண்டு மாணவர்களையும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று எச்சரித்திருந்தாலும், அவர்கள் தங்களுக்கு நீந்த முடியும் என்று மீனவருக்கு பதில் அளித்துள்ளனர்.
சடலங்கள்
மேலும் பலர் இரண்டு மாணவர்களும் மகாவலி ஆற்றில் இறங்குவதைக் கண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனைதொடர்ந்து, தென்னகும்பும்புர பாலத்திற்கு அருகிலும், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியிலும் காவல்துறை மற்றும் கடற்படை டைவர்ஸ் விரிவான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், மாணவர்கள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
