500 ரூபா பணத்தை திருடிய அண்ணன் : அடித்தே கொன்ற தம்பி
500 ரூபா பணத்தை திருடிச் சென்ற தனது மூத்த சகோதரனை அடித்து கொன்றார் என்ற சந்தேகத்தின் பேரில் தம்பியான சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பின்வத்த காவல்துறையினர் தெரிவித்தனர்.
பின்வத்த உபோசதாராம வீதியில் வசிக்கும் 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அண்ணன் உயிரிழப்பு
பின்வட் உபோசதாராம வீதியைச் சேர்ந்த ஜயந்த சில்வா என்ற 52 வயதுடைய நபரே பாணந்துறை அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் உயிரிழந்த தனது மூத்த சகோதரர் மற்றும் தாயாருடன் வீட்டில் வசித்து வருவதுடன், 500 ரூபா திருடப்பட்டமை தொடர்பில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட உரையாடல் முற்றியதையடுத்து கடந்த 13ஆம் திகதி அவர் தனது மூத்த சகோதரனை தாக்கியுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
தாக்குதலில் காயமடைந்த நபர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த 21ஆம் திகதி உயிரிழந்ததுடன், பிரேதப் பரிசோதனையின் போது தெரியவந்த உண்மைகளின் அடிப்படையில் பிரதான காவல்துறை பரிசோதகர் பத்மா நந்தன தலைமையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |