நெடுந்தீவு பிரதேச சபையைக் கைப்பற்றியது தமிழரசுக்கட்சி
யாழ்ப்பாணம் (Jaffna) - நெடுந்தீவு பிரதேச சபையின் (Delft Pradeshiya sabha) தவிசாளராக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளரைத் தெரிவு செய்யும் அமர்வு இன்று 11.30 மணிக்கு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் நெடுந்தீவு பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
அத்துடன் நெடுந்தீவு பிரதேச சபையின் உப தவிசாளராக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் செபஸ்ரியன் விமலதாஸ் தெரிவாகினார்.

செம்மணியில் இருந்து ஐ.நா ஆணையாளரை திருப்பி அனுப்ப திட்டமிட்ட அரசு: முகத்திரையை கிழித்த அர்ச்சுனா எம்.பி
நிகழ்வில் கலந்துகொண்டோர்
நெடுந்தீவு பிரதேச சபையானது 13 உறுப்பினர்களைக் கொண்ட பிரதேச சபையாகும்.
தமிழரசுக்கட்சி சார்பில் 06 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக 04 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் 02 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் 01 உறுப்பினரும் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
இன்றைய தவிசாளர் தெரிவிற்கு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் (C. V. K. Sivagnanam) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan), வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.சுகிர்தன் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




