நீதித்துறை முயற்சியை கவிழ்க்கும் திட்டம்! சஜித்தோடு களத்தில் குதிக்க தயாராகும் நாமலுக்கு புதிய சிக்கல்
உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் தெரிவித்ததை அடுத்து, அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கொந்தளிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் அக்கட்சிகள் திட்டமிட்ட பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன என்றும் கூறப்படுகிறது.
இந்த பிரசாரத்தின் சமீபத்திய இணைப்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நாமல் ராஜபக்ச நேற்று (7) அனுப்பிய கடிதம் பார்க்கப்படுகிறது.
நீதியரசர்களின் பதவிக்காலம்
அக்கடிதத்தின் தலைப்பு, “உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை வேண்டுமென்றே நீட்டித்து, சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கும் முயற்சிக்கு எதிராக, ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து கட்சிகளும் எழுந்து நிற்க வேண்டியதன் அவசியம்” என்று கூறப்படுகிறது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஆசிய சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள்சங்கம் ஆகியவை இந்த முயற்சிக்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக அக்கடிதம் மேலும் குறிப்பிடுகிறது.
இருப்பினும், பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைமையில் 4ஆம் திகதி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் நடத்தப்பட்ட கூட்டம் முற்றிலும் தோல்வியடைந்ததுடன், சங்கத்தின் பல உறுப்பினர்கள் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்குத் தங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று தங்கள் கருத்துக்களைத் தெரிவித்ததாக சுட்டிக்கபட்டப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பல அதிகாரிகளின் மிகவும் தந்திரமான முயற்சி தோல்வியடைந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, நாமல் ராஜபக்ச நேரடியாகத் தலையிட்டு, சஜித் பிரேமதாச உள்ளிட்ட சில எதிர்க்கட்சிக் குழுக்களுடன் கூட்டணி அமைக்க முயற்சிக்கிறார் என்பதை இந்தக் கட்டுரை தெளிவுபடுத்துகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |