ஊடக சுதந்திரம் கோரி யாழ். மாவட்ட செயலகம் முன்பாக வெடித்த போராட்டம்!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம் ஒன்று நடைபெற்றது.
ஊடகவியலாளர்களால் யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் (31) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
நிகழ்வைப் புறக்கணித்த ஊடகவியலாளர்கள்
முன்னதாக யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொள்ளவிருந்த நிலையிலையே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரி, ஊடக பிரதி அமைச்சரின் நிகழ்வினை யாழ். ஊடக அமையத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் புறக்கணித்தனைர்.
இந்தப் போராட்டத்தின் போது “அரச இயந்திரமே ஊடகவியலாளர்களை அடக்காதே“, “ஊடகப் படுகொலைக்கு நீதி வேண்டும்”, ”படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி எங்கே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஊடகவியலாளர்கள் போாராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


