அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தல்! மொட்டு கட்சியின் சூழ்ச்சி
இலங்கையில் இந்த ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுமென அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கமைய, நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை
இலங்கையின் அரசியலமைப்புக்கமைய இந்த ஆண்டின் இறுதிக்கு முன்னதாக இலங்கையில் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

சாந்தனுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி் : ஓரணியில் மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட்ட கட்சிகள்!
எனினும், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கலைக்க அனைத்து உரிமைகளும் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மொட்டு கட்சி
அத்துடன், இந்த ஆண்டில் நிச்சயம் அதிபர் தேர்தல் நடத்தப்படுமென ரணில் விக்ரமசிங்கவும் அவருக்கு ஆதரவளிக்கும் சிலரும் கருத்து வெளியிட்டிருந்தாலும், தற்போது சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிபர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 3 நாட்கள் முன்