இன்றைய வானிலை; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
நாட்டின் இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் சில இடங்களில் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.
இன்றும் மழை
இன்று (11) நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடமேல் மாகாணம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிளும் சில வேளைகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடற்பரப்புகளில் மழை
மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடற் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்
