கிழக்கில் செயற்பட்ட முஸ்லீம் படையணி: அழிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சாட்சிகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நீதித்தேடலை 7 ஆண்டுகள் தாண்டியும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நிலையில், தாக்குதலை தாண்டிய மரணங்கள், தாக்குதலுக்கு முன்னர் அழிக்கப்பட்ட ஆதாரங்கள், உயிர்கள் போன்ற அறிக்கைகள் புதிய அதிர்ச்சிகளை தற்போது வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் நாடாளுமன்றில் இடம்பெற்ற தனது உரையில் இலங்கையின் தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வெளிப்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரான சதிகள் என்ற தலைப்பைின் பின்னணியை எமது ஊடகம் தேடிய போது பல்வேறான மறைக்கப்பட்ட சம்பவங்கள் வெளிவந்திருந்தன.
இதில் சாட்சிகளை தந்திரோபாயமாக மறைக்க இடம்பெற்ற கொலைகளின் பட்டியல் அது தொடர்பில் தற்போது அநுர குமாரவின் கைகளுக்கு சென்ற அறிக்கையின் பின்னணி என்பன ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் பிள்ளையான், சுரோஸ் சலே போன்ற சந்தேகநபர்கள் மேல் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை மேலும் வலுவடைய செய்துள்ளன.
இவ்வாறே சில முக்கிய சாட்சிகள் மற்றும் தொடர்புடைய நபர்கள் மர்மமான சூழ்நிலைகளில் உயிரிழந்த சம்பவங்கள் சமூக ஊடகங்களிலும் அரசியல் மேடைகளிலும் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளன.
இந்த மரணங்கள் குறித்து எழுந்த முக்கிய சந்தேகங்கள், இயற்கை மரணங்களா அல்லது திட்டமிட்ட கொலைகளா? விசாரணைக்கு முக்கியமான தகவல்களை வழங்கியிருக்கக் கூடியவர்களா? இந்தச் சம்பவங்கள் ஒரே மாதிரியான முறைப்படி நடந்ததா? என்பதை விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |