அதிவேக நெடுஞ்சாலைக்குள் திடீரென நுழைந்த யானையால் பரபரப்பு
Sri Lanka
Elephant
Expressways in Sri Lanka
By Sumithiran
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஹம்பாந்தோட்டை-மத்தள பகுதியிலிருந்து வந்த காட்டு யானையை விரட்ட வீதி அபிவிரத்தி அதிகார சபை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நேற்று இரவு சுமார் 11 மணியளவில் யானை அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்து, ஹம்பாந்தோட்டை சாலையில் 1.9 கிலோமீட்டர் தூணுக்கு அருகிலுள்ள மின் வேலியை சேதப்படுத்தி சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் பயணித்தது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் துரித நடவடிக்கை
யானை ஒன்று அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்ததைக் கவனித்தவுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் யானையைச் சுட்டு விரட்ட நடவடிக்கை எடுத்தனர்.இதனையடுத்து யானை மத்தள நுழைவாயிலில் இருந்து வெளியேறி ஓடியது.

அந்த நேரத்தில் மத்தள நுழைவாயிலில் இருந்து அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்து வெளியேறும் வாகனங்களைத் தடுக்கவும் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 20 மணி நேரம் முன்
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி