கல்வியியற் கல்லூரிகளை மறுசீரமைக்க நிபுணர் குழு நியமனம்
நாட்டிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் அவற்றை மறுசீரமைப்பதற்காகவும் ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிபுணர் குழுவிற்கு பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி தலைமை தாங்குகின்றார்.
அதன்படி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அரோஷா அடிகாரம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பூபாலசுந்தரம் ஐயங்கரன், மற்றும் இலங்கை ஆசிரியர் கல்வி சேவையின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் பி.ஏ.டி. அனில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பிரதமர் வலியுறுத்தல்
உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் உட்பட, தேசிய கல்வியியற் கல்லூரிகளின் ஒட்டுமொத்த நிறுவனக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும் பணி இக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஆளுகை, நிலைத்தன்மை, கற்றல் சூழல், மதிப்பீட்டு முறைகள், மற்றும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு போன்ற முக்கியப் பகுதிகளிலும் இக்குழு கவனம் செலுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அரசாங்கத்தின் கல்வி உருமாற்ற இலக்குகளுக்கு இணங்க, வலுவான திறன்களையும் தலைமைத்துவப் பண்புகளையும் கொண்ட ஆசிரியர்களை வளர்க்கும் ஒரு சூழலை இந்த நிறுவனங்களுக்குள் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.
புதிதாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின்போது பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 5 நாட்கள் முன்